சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்-அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;-
புறநகர் ரயில்கள்
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version