“நாட்டில் வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை” : பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை” என்று சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

அண்மையில் புதிய கல்வி கொள்கை வழங்கிய வசதி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் நல்ல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம். இது இல்லாததால்தான், இளைஞர்கள் வெளிநாடு செல்ல நேரிடுகிறது. அரசியலில் இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும். நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை.

மக்களுக்கு ஊழல் சுமையாக மாறிவிட்டது. வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும். ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. இதுபோன்ற நபர்கள், குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். வம்சாவளி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது.

Read more – சசிகலா 27-ம் தேதி விடுதலை : சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு

வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை. வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம். பேரழிவில் தங்கள் சொந்த பாதையை உருவாக்க கற்றுக்கொள்ளும் சமூகம், தங்கள் விதியை எழுதுகிறது. அதனால்தான், 130 கோடி இந்தியர்களும் தங்கள் சொந்த விதியை இன்று எழுதுகின்றனர். இன்றைய இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும், புத்தாக்கமும், நேர்மையும் நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version