மூதாட்டியின் கூற்றை மாற்றி திரித்த நாராயணசாமி… பாவம்ப்பா இந்த பப்பு..

ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்ற காரணத்தினால் அவரிடம் தன்னைப் பற்றிய புகாரை மறைத்து நாராயணசாமி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி :

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ கிராம பெண்களுடன் ராகுல்காந்தி நேற்று கலந்துரையாடினார். அப்போது, மூதாட்டி ஒருவர் நிவர் புயலின் போது பெய்த பலத்த மழையால் எங்கள் கிராமம் கடுமையாக பாதித்தது, யாருமே பார்க்கவில்லை.

அவ்வளவு ஏன், இதோ இங்கு நிற்கிறாரே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர் கூட எங்களை பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அப்பொழுது திகைத்துப்போன நாராயணசாமி ராகுல் காந்தியிடம் அவ்வளவு நேரம் நன்றாக மொழிபெயர்த்த வந்தநிலையில், தன் மீதான குற்றசாட்டை முழுவதும் மறைத்து புயலின்போது நான் இங்கு வந்து பார்த்தேன் என்று வேறுமாதிரி திரித்து விட்டார்.

Read more – அதிமுகவிற்கு நானே ராஜா.. சண்டையிட்ட சசிகலா… நொந்துப்போன இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்

ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்ற காரணத்தினால் அவரிடம் தன்னைப் பற்றிய புகாரை மறைத்து நாராயணசாமி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version