சசிகலாவுக்கு வைரஸ் தொற்று குறைந்து வருகிறது – மருத்துவமனை அறிக்கை

சசிகலாவின் வைரஸ் தொற்று குறைந்து அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.

சசிகலாவின் நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் சீராக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சசிகலா சர்க்கரை தாக்குதல் அதிகரித்து அவதிப்பட்டு வந்ததால் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருக்கு அதிகபட்சமாக சர்க்கரை அளவு 256 ஆக இருந்த நிலையில் இன்று காலை அவருடைய சர்க்கரை அளவு 178 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப்படும் இன்சுலின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

சசிகலா வேகமாக குணமடைந்து வருவதாகவும் அவரது உணவை உட்கொண்டு கைத்தாங்கலாக நடந்து வருவதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் திருமதி சசிகலாவிற்கு இசட் பிளஸ் (Z +) பாதுகாப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு அவரது வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். திருமதி சசிகலா அரசியலில் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவர். அவருக்கு அரசியலில் எதிரிகள் பலர் உள்ளதால் சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  வாசுகி ராஜராஜன் என்ற வழக்கறிஞர் மத்திய உள்துறை செயலாளருக்கு மனு அளித்துள்ளார்.

Exit mobile version