திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! – ஸ்டாலின்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவினாலும் சில மனங்கள் அதை ஏற்க மறுக்கின்றன என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடி கூறும் தமிழின் தொன்மை – அதை அழிக்க முயலும் பாஜக அரசின் திட்டம் தோல்வியடையட்டும் என்ற பெயரில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை , வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கீழடி தமிழர் தாய்மடி, ஆர்ப்பாட்டத்தில் அனவைரும் கலந்து கொள்வோம் என திமுக மாணவரணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,

எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல;

சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version