2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடுதல் நிறுத்தமா? நிதி அமைச்சகம் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடுதல் நிறுத்தமா? என்ற கேள்விக்கு மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்தார்.

புதுடெல்லி:

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர் விளக்கமளித்துள்ளார்.

அதே நேரத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டதாக கூறினார். தற்போது ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியை, அச்சகங்கள் படிப்படியாக தொடங்கியுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version