விண்ணில் பாயும் அதிநவீன செயற்கைக்கோள்

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 என்ற செயற்கைகோளை

 

இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிய ரக செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் மற்ற செயற்கைக்கோள்களுக்கு பயன்படுத்துவதே இ.ஒ.எஸ் – 08 செயற்கைக்கோளின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எலெக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் – ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர்(SiC UV Dosimeter) ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் உள்ள இ.ஒ.ஐ.ஆர் கருவி பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பிலும் இரவில் துல்லியமான படம் எடுக்கவும் முக்கியப் பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version