ஆன்டர்ஸனின் அசத்தலான பந்துவீச்சால் சவுத்தாம்டனில் நடந்து வரும் 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.
தனக்கே உரித்தான ஸ்விங் மற்றும் துல்லிய பந்துவீச்சால் அசத்தலாக மிரட்டிய ஆன்டர்ஸன் 56 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் சரிவுக்குக் காரணமாக விளங்கினார்.
தற்போது 600 விக்கெட் மைல்கல்லை அடைவதற்குஇன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே ஆன்டர்ஸனுக்கு தேவைப்படுகிறது.
தோல்வியின் விழிம்பில் இருக்கும் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் மேலும் 310 ரன்கள் சேர்த்து அதன்பின் லீடிங் ரன் சேர்ப்பது என்பது டெஸ்ட் போட்டிகளில் சாத்தியமில்லாத ஒன்றேயாகும். இன்னும் இரு நாட்கள் மீதம் இருப்பதாலும் மற்றும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக உள்ளதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி காய் நகர்த்தும் என்று தெரிகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில்பாகிஸ்தான் கேப்டன் அசால் அலி மட்டுமே பொறுமையுடன் ஆடி 141 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அவருக்குத் துணையாக சிறிது நேரம் களத்தில்ரிஸ்வான் 53 ரன்கள் சேர்த்து தாக்குப்பிடித்தார்ர்மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கித் திரும்பும் வண்ணமே இருந்தார்கள்.தற்போது இங்கிலாந்தை விட, பாகிஸ்தான்முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் பின்தங்கியுள்ளது.ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் மற்றும் வெளிச்சம் இன்மையும் இல்லாமல் இருந்ததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால், 598 விக்கெட்டுகளுடன் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் இன்று இந்த மைல்கல்லை அடைவார் என எதிர்பார்ப்பு உள்ளது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் மொத்தம் மூன்று பேர் இதில் இலங்கை முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708), அனில் கும்ப்ளே (519) ஆகிய மூவரும் இந்த சாதனை படைத்துள்ளார்கள்.தற்போது ஆன்டர்ஸன் 600 விக்கெட்டுகளை எட்டினால் 4-வது வீரர் எனும் பெருமையும் இங்கிலாந்து சார்பாக முதல் வீரர் என்ற பெருமையும் பெறுவார்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் விழுந்திருந்த நிலையில் 583 விவரங்களுக்கு டிக்ளேர் செய்து அறிவித்தது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான கிராலி 267 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.அதற்குப் பின்னர் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில்2-வது நாள் ஆட்டநேர முடிவில் 24 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் எழுந்திருந்தது களத்தில் அசார் அலி மட்டும்10 ரன்களுடன் இருந்தார்.
நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் அசார் அலி, ஆசாத் ஷாபிக் களமிறங்கினர். ஆட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயேஆன்டர்ஸன் பந்துவீச்சில் 5 ரன்னில் ஷாபிக் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த பவாத் ஆலம் நிலைத்து ஆடாமல் 21 ரன்னில் பெஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.ஒரு கட்டத்தில் 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் மற்றும் அசார் அலி கூட்டணி. 6-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது . ரிஸ்வான் அரை சதம் கடந்ததற்குப்பிறகு53 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்பு நிதானமாக விளையாடிய ஆடிய அசார் அலி 205 பந்துகளில் சதம் அடித்தார். இந்த சதம் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அதன்பின் வரிசையாக களமிறங்கிய யாஷிர் ஷா (20), ஷாகின் அப்ரிதி (5), முகமது அப்பாஸ் (1), நஷீம் (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸ் 93 ஓவர்களில் 273 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடுவதற்காகபாகிஸ்தான் பாலோ-ஆன் பெற்று விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் போதுமான வெளிச்சம் இன்மையால் மற்றும் மழையின் காரணமாகவும் ஆட்டம் தடைபட்டது.இங்கிலாந்துஅணியின் ஆன்டர்ஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும்பிராட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.