யுவராஜ் மீது டோனி நம்பிக்கை-உலகக்கோப்பை 2011

2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி வரை டோனி என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார்.அத்துடன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் பெற்றார் யுவராஜ் சிங்.

அந்த போட்டிக்கு பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர்,19 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் மறுபிரவேசம் ஆனார்.ஆனால் முன்புபோல் அவரால் நட்சத்திர வீரராக ஜொலிக்க முடியவில்லை.

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.பிறகு ஜூன் மாதத்திற்கு பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து விடைப்பெற்றுக்கொண்டார்,

புற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்ட எனக்கு விராட் கோலி ஆதரவு அளித்தார்.அவரது ஆதரவு இல்லாமல் என்னால் இந்திய அணிக்கு திரும்பி இருக்க முடியாது.

 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி குறித்து உண்மையான நிலைமையை டோனி எனக்கு உணர்த்தினார். அந்த உலக போட்டிக்கு தேர்வாளர்கள் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என்பதை எனக்கு புரிய வைத்தார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்தார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார். ‘நீங்கள் அணியின் முக்கியமான வீரர்’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. ஒரு கேப்டனாக சில நேரங்களில் உங்களால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. இறுதியில் ஒரு அணியாக நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு களம் திரும்பிய போது என் மீது நம்பிக்கை வைக்காததற்காக நான் யாரையும் குறை சொல்லமாட்டேன். ஏனெனில் எனது ஆட்டத்தின் மீது முன்பு இருந்த நம்பிக்கை வருவதற்கு எனக்கே சில காலம் பிடித்தது.

Exit mobile version