இந்தியாவிற்கு முதல் தங்கம் மீராபாய் சானு அசத்தல்

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் இதுவரை யாரும் தங்கப்பதக்கத்தை பெறாத நிலையில் இன்று இந்தியா தனது தங்கப்பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது. மகளிர் பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடைபிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

முன்னதாக, ஆடவருக்கான 55கிலோ எடைபிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.இதேபோல், 61 கிலோ எடைபிரிவில் குருராஜா வெண்கலம் வென்றார். வெற்றிபெற்ற வீரர்,வீராங்கணைகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Exit mobile version