இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து பிபா அறிவிப்பு

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

17வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11ம் தேதி தொடங்கி அக்டோபர் 30ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல்முறையாக இந்தியாவிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், மூன்றாம் நபர்களின் தலையீடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என்று பிபா அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் நடக்க இருந்த உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.

Exit mobile version