யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தல்

புதுச்சேரியில் நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டியில் யாஷ் துல் 193 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.

கிழக்கு, வடக்கு மண்டலங்கள் மோதிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம் 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடி வரும் வடக்கு மண்டலம் 100 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில், 19 வயதான யாஷ் துல் 193 ரன்களை எடுத்து அசத்தினார்.

நடப்பு ஆண்டு (2022) யு-19 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்தவர் யாஷ் துல். ரஞ்சி கோப்பையின் அறிமுகப்போட்டியில் இரு சதங்களையும், பின்னர் இரட்டை சதத்தையும் அடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது துலீப் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.

Exit mobile version