இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்!!!

உலகளவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் தொடர்களுக்கும் முன்னோடியாக விளங்குகிறது இந்தியாவால் நடத்தப்படும் ஐபிஎல். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா இல்லையா என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த முடிவெடுக்க
பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் செப்டம்பர் மாதம் தொடரை நடத்துவதற்கான முனைப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பொது தேர்தல் காரணமாக ஏற்கனவே இரண்டு முறை ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 4000 கோடி வரை இழப்பு ஏற்பட கூடும் என்பதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version