பொல்லார்ட் மற்றும் கோல்டர் நைல்லின் விஸ்வரூபத்தால் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்காக மும்பை அணி வழங்கியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து மும்பை அணி சார்பாக தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் களம் இறங்கினர்.அடிப்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் வெளியேற,அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ்வும் டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.
மறுமுனையில் நிலைத்து நின்ற டி காக் அவ்வப்போது பௌண்டரிகளை ஓட விட்டு கொண்டு இருக்க,இஷான் கிஷன்(7 ரன்கள்,7 பந்துகள்)அர்ஸிதீப் பந்தில் முருகன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.டி காக்கிடம் இணைந்த குர்னால் பாண்டியா ஓரளவு அடித்து 50 ரன்கள் பாட்னர் ஷிப் அமைத்தனர்.அடித்து ஆடிய குர்னால் பாண்டியா(34 ரன்கள்,30 பந்துகள்) ரவி பிஸ்னோய் பந்தில் அடித்து ஆட முயற்சித்து தீபக் கூடாவிடம் கேட்ச் ஆனார்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய டி காக் 39 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த,வந்தவுடன் சிக்ஸர் அடித்து அசத்திய ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் சமி பந்தில் அவுட் ஆனார்.16 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து இருந்தது.
ஜார்டன் வீசிய 17 வது ஓவரில் அரைசதம் அடித்த டி காக்(53 ரன்கள்,43 பந்துகள்)அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்த ஓவர் வீசிய அர்ஸிதீப் பந்தில் தொடர்ந்து பொல்லார்ட் 2 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட,அதே ஓவரில் கோல்டர் நைல் தன் பங்கிற்கு 2 பௌண்டரிகளை ஓட விட்டார்.சமி வீசிய 19 வது ஓவரில் கோல்டர் நைல் மீண்டும் 2 பௌண்டரிகளை நொறுக்க,கடைசி ஓவர் வீசிய ஜார்டன் பந்தில் பிரம்மாண்டமாய் 2 சிக்ஸர்கள்,ஒரு பௌண்டரி பறக்க விட,20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்காக வழங்கியது.
மும்பை அணி சார்பில் பொல்லார்ட் 34 ரன்களுடனும்,கோல்டர் நைல் 24 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.