பந்து வீச்சை தேர்வு செய்தது கோவை அணி!

தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி கொண்டு வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் யாவும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெற்று பின் இறுதிப்போட்டியில் விளையாடும். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. எனவே இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இந்த ஆட்டத்துக்கான டாஸை வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்த வீசுதலை தேர்ந்து எடுத்து இருக்கிறது. இதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version