பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

டெல்லி அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் இறுதியில் ஸ்டோனிக்ஸ் அதிரடி அரை சததால் 157 எடுத்து இருந்தது.அடுத்து 158 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி. தொடக்க ஆட்ட வீரர்களாக கேப்டன் ராகுல்,மயங்க் அகர்வால் இலக்கை நோக்கி அடிக்க தொடங்கினர்.மோஹித் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் ராகுல் சிக்ஸர் அடிக்க டெல்லி அணிக்கு பதட்டம் தொற்றி கொண்டது.தொடர்ந்து சிறிது இடைவெளியில் தென் ஆப்ரிக்கா வீரர் நார்ஜே வீசிய 4 வது ஓவரில் 2 பௌண்டரிகளை ஓட விட்டார் ராகுல்.
அடுத்தடுத்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த கேப்டன் கே.எல்.ராகுல் 19 பந்துகளில் 21 ரன் எடுத்து மோஹித் வீசிய 5 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.அடுத்து வந்த வேகத்தில் கருண் நாயர் அஸ்வின் வீசிய முதல் பந்தில் வெளியேற,அதே ஒவரில் அதிரடி மேற்கிந்திய வீரர் பூரான் போல்ட் ஆனார்.இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி 6 ஓவரில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்களுடன் தடுமாறியது.அடுத்து பெரிதும் எதிர்பார்க்க பட்ட மேக்ஸ்வல் ரபடா வந்து வீச்சில் டெல்லி கேப்டன் கையில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 10 ஓவர் முடிவில் சர்ப்ராஜ் கான் அக்சார் பட்டேல் பந்தில் அவுட் ஆகி 55 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது பஞ்சாப் அணி.மறுமுனையில் நிலைத்து நின்ற தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 24 பந்துகள் பிடித்த பிறகு ஒரு சிக்ஸர் அடிக்க அணியின் எண்ணிக்கை 60 ரன்களை கடந்தது.அடுத்தது 13 வது ஓவரில் அகர்வால் நார்ஜே பந்தில் 2 பௌண்டரிகளை ஓட விட்டார். 35 பந்துகளில் 70 ரன்கள் பஞ்சாப் அணிக்கு தேவை என்ற நிலையில் கிருஷ்ணப்பா கெளதம் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்ட்ரி அடித்து 100 ரன்களை கடக்க உதவினார்.. அடுத்து கௌதமும் ரபடா பந்தில் 20 ரன்களில் வெளியேற 16 ஓவரில் 105 ரன்களுடன் பஞ்சாப் தடுமாறியது.அகர்வால் மட்டும் ஒரு முனையில் அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார்.அடுத்தது 2 சிக்ஸர்களை அகர்வால் மோஹித் பந்தில் பறக்க விட்டு டெல்லி அணிக்கு பீதியை கிளப்பினார்.11 பந்துகளுக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் ரபடா பந்தில் அடுத்தடுத்து ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்தார் அகர்வால்.இறுதி ஓவரில் 13 தேவை பஞ்சாப் அணிக்கு தேவை பட்டப்போது ஸ்டோனிஸ் வீசிய முதல் பால்லே சிக்ஸர் அகர்வால் அடித்தார்.2 வது பந்தில் 2 ரன்கள் ஓடினார்,தொடர்ந்து ஒரு பௌண்டரி அடிக்க இரு அணிகளும் சமநிலை பெற்றது.19.4 ஓவரில் அகர்வால் ஸ்டோனிஸ் பந்தில் தூக்கி அடித்து 89 ரன்களின் வெளியேறினார்.ஒரு பந்திற்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜோர்டன் அவுட் ஆகி சூப்பர் ஓவர்க்கு கொண்டு சென்றார்.
சூப்பர் ஓவர் :
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங்கில் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் பூரன் வர ..வந்த வேகத்தில் வெளியேறினார்..அடுத்து அதிரடி காட்ட நினைத்த பூரன் ரபடா பந்தில் அவுட் ஆனார்.சூப்பர் ஓவர் விதிமுறை படி இரண்டு விக்கெட் விழுந்தால் டீம் அவுட் ஆகும்.அடுத்து 3 ரன்கள் இலக்குடன் டெல்லியில் கேப்டன் ஐயர்,பண்ட் பேட்டிங்கில் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்து ரன்கள் ஏதுமின்றி இருக்க..சமி வீசிய இரண்டாவது பந்து வைடு ஆக போட்டார்.அடுத்த பந்தில் பண்ட் 2 ரன்கள் எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.