தொடங்கியது டி.என்.பி.எல் 120‌ ரண்களில் ஆட்டம் இழந்தது திருச்சி

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரானது வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதன்படி கோவையில் இன்று இரவு நடைபெறும் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் பால்சி திருச்சி அணி மோதுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டு. அதில் டாஸை வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி முதலில் பேட்டிங்கை செய்தது. தொடக்கம் முதலேயே திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி தடுமாறியது. இதனால் திருச்சி அடுத்தடுத்து விக்கெட் இழந்து 19.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி 10 விக்கெட்களை இழந்து 120 ரன்களை எடுத்தது. இந்த ஸ்கோரை தொடர்ந்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி தற்போது விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version