6 வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி சாதனை படைத்த சிறுமி

மூன்று வயதில் இருந்து மலைகள் ஏறுவதில் ஆர்வம் இருந்ததால் 6 வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி சாதனை படைத்து இருப்பதாக சிறுமி லலித் ரேணுவின் தந்தை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வெங்கடேஷ் இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 6 வயது மகள் லலித் ரேணு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஸ்ரீதர் வெங்கடேஷ்க்கு மலை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உள்ளதால் மனைவி மற்றும் தனது குழந்தையையும் மலையேற்றத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். இந்தநிலையில் மே 5-ம் தேதி தனது மனைவி மற்றும் மகள் லலித் ரேனுவை அழைத்து கொண்டு எவரஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது மனைவி அபர்ணாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீதர் தனது மகள், லலித் ரேணுவும் முயற்சி செய்து மலை ஏறி கடந்த மே 14ல் 18,000 அடி உயரமுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி லலித் ரேணு முதல் முதலாக எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து சாதனை படைத்திருப்பதாக அவர் தந்தை ஸ்ரீதர் வெங்கடேசன் தெரிவித்தார். சிறுமி லலித் ரேணுவுக்கு மலையேற்றம் மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தியதோடு உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் ஃபேஸ் கேம்பை அடைந்துள்ளார். ஆறு வயது சிறுமி எவரெஸ்ட் ஃபேஸ் கேம்பை அடைந்த லலித் ரேணுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version