அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வு!

இந்த உலகம், இப்போதுதான் நோயின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விடியலிலும், உலகம் இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. பண்டிகைகளும், வண்ணங்களும் வாழ்வில் மறுபடியும் நம்மிடையே மகிழ்ச்சியை கொண்டு வந்துக் கொண்டிருக்கிறது.

எல்லாமே இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், நம் உடல் மட்டும் கொஞ்சம் அசாதாரணமாய் இருக்கின்றது. காரணம், வீட்டிலிருந்து பணி என ஏழு மாதங்களுக்கும் மேலாக எல்லோரும் முடங்கி இருந்திருக்கோம். இந்த முடக்கம், நேரத்துக்கு தூங்காமை – நேரத்துக்கு எழுந்திருக்காமை – நேரத்துக்கு சாப்பிடாமை என ஏராளமான சிக்கல்களை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறது. இந்த மூன்று பழக்கங்களோடு சேர்த்து, நம்மில் நிறைய பேர், ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் உட்கார்ந்தே பணி செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறோம். இந்த `உட்கார்ந்தே பணி’ சூழலில், அதிகபட்சம் லேப்டாப் பார்க்கிறோம், அல்லது மொபைலில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்படியும் இல்லையெனில் டிவியே கதியென கிடக்கிறோம். இப்படி உடலுக்கு உழைப்பே கொடுக்காமல் இருப்பது, உடல்நலத்துக்கு மிகப்பெரிய கேடு எனக்கூறி, அப்படிப் பணி செய்பவர்களையெல்லாம் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, மருத்துவ ஆய்வாளர் டாம் யேட்ஸ் கூறும்போது, `பணிக்குச் செல்லும் 36,000-த்துக்கும் மேற்பட்ட நபர்கள் உட்படுத்தப்பட்டிருந்த எங்கள் ஆய்வின் முடிவில், தினமும் 9.30 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுளில் சில ஆண்டுகள் கணிசமாகக் குறைவது தெரியவருகிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இப்படியானவர்களுக்கு வாழ்நாள் குறைந்து, மரணம் முன்கூட்டியே ஏற்படுகிறது'' என்றிருக்கிறார். இதை வாசிக்கும்போதுபல மணி நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது, இவ்வளவு ஆபத்தானதா?’ என உங்களுக்குத் தோன்றலாம். உண்மைதான் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த ஆய்வானது, அன்றாடம் அனைவரும் அலுவலகம் சென்று வேலைப் பார்க்கும்போது செய்யப்பட்ட ஆய்வாகும். அன்றாடம் அலுவலகம் செல்லும்போதே, இந்த அளவுக்கு தொய்வு நம்மிடம் இருந்திருக்கிறது என்றால், இப்போது வீட்டிலேயே இருந்துக்கொண்டு – அதுவும் ஒரே மாதிரி உட்கார்ந்துக் கொண்டு – சரியான வாழ்க்கைமுறையும் இல்லாமல் இருக்கும் போதென்றால், விளைவுகளை சொல்லவா வேண்டும்?

பல மணி நேரம் ஒரே பொசிஷனில் அமர்ந்தே இருப்பதால் என்னென்ன பிரச்னைகளெல்லாம் வரலாம் என்பது குறித்து, மேற்கூறிய ஆய்வை செய்த மருத்துவரின் குழு, சில விஷயங்களை முன்வைத்திருந்தது. அவை,

இந்தப் பிரச்னைகளையெல்லாம் தடுக்கவும், மேற்கொண்டு வரும் நாள்களில் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கி – உலகத்தோடு சேர்ந்து, உங்கள் உடலும் இயல்புக்கு திரும்பவும், எங்கள் சார்பில், உங்களுக்காக சில ஆலோசனைகள் இங்கே….

கொரோனாவிலிருந்து மீண்டுக் கொண்டிருக்கும் இந்த புத்தம் புதிய உலகத்துக்கு, மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக தயாராவோம், வாருங்கள்!

கட்டுரையாளர் : ஜெ.நிவேதா

Exit mobile version