தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், பெட்எக்ஸ், யுபிஎஸ் என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் தலைவர்களுக்கும், சவுதி நாட்டின் அராம்கோ, எக்சானச மொபில் கார்ப்பரேசன் சிபிசி கார்ப்போரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கும் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் தமிழகத்தில் புதிய முதலீடு மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்கள் சிறப்பான தொழில் சூழ்நிலைகளை குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு மாநில அரசு சிறப்பான ஆதரவை தரும் என்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு உள்ளதாக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version