கடந்த 2017ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் ஆனார்.
2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அனைவராலும் ஒரு மனதாக மீண்டும் பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் உறுப்பினராக இருந்து இன்று கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
1.1954-ல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.
2.ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் கல்வி பயின்றார்.
3.கல்வி கற்கும் வயதிலேயே எம்ஜிஆர் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். செங்கோட்டையன் மூலம் அரசியலில் அறிமுகமானார்.
4.அதிமுகவினரிடையே எடப்பாடி பழனிசாமி என்ற அடைமொழி பிரபலமானது.
5.எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார்.
6.1989-ல் முதல்முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
7.1991-ல் 2வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
8.1998-ல் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
9.2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
10.2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
11.2011-ல் 3வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.
12.2016-ல் 4வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.
13.11 தொகுதிகளில், 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற உழைத்தவர் பழனிசாமி
14.அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
15.2017ல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.
16.தற்போது முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி..