பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு !!!

தமிழக அரசின் சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது எழுந்த சொத்துகுவிப்பு புகாரை விசாரித்து அறிக்கை உத்தரவிட்டுள்ளது மத்திய அரசின் பணியாளர் நலத்துறை.

பொது முடக்கம், கட்டுப்படுத்தப்பட்ட தளர்வுகள் என கட்டுக்குள் அடங்க மறுக்கும் கொரோனாவை கண்டு அனைவரும்  பயந்து நடுங்கி வருகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் அரசுகள் தள்ளாடி கொண்டிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ் இவருடைய தினசரி  கொரோனா குறித்து வெளியிட்ட அறிக்கை மக்களிடையே மிகவும்பிரபலமடைந்தது இந்நிலையில் ஒரு கட்டத்தில் மக்கள் அவருடைய அறிக்கைக்காக காத்திருந்து கிடந்தார்கள் என்றே சொல்லலாம் 

கொரோனா நடவடிக்கையில்ஈடுபட்டிருந்த இருந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டார். இதன்பின்னர்,சமூக ஆர்வலர் செந்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறி, அந்த சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசின் பணியாளர் நலத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார் சமூக செந்தில். இந்த புகாரின்மீது, உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அறிவுறுத்தியது 

தற்போது சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது எழுந்த சொத்துகுவிப்பு புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளது மத்திய அரசின் பணியாளர் நலத்துறை.

Exit mobile version