பண்டிகை பக்ரீத்யானது பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். எனவே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி இருக்கிறது. நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பின்னால் வாரச்சந்தை எப்பொழுதுமே செயல்பட்டு வரும். இங்கு நேற்று அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், கரூர், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய மக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை இந்த ஆடுகள் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரையிலும் கூட விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும், கடந்த ஆண்டைவிட குறைவாகவே இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் வெள்ளாடுகளைவிட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதாகவும் வியாபாரிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்ரீத்தை முன்னிட்டு எகிறியது ஆடு விற்பனை!
-
By mukesh
Related Content
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024
மாமதுரை விழா!
By
daniel
August 8, 2024
நீதிமன்றம் உத்தரவு
By
daniel
February 19, 2024