வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10.30 மணியளவில் காவல்துறைக்கு வந்த ஒரு மின்னஞ்சல் காரணமாக பள்ளிகள் பரபரக்கத் தொடங்கன. பாரிமுனை, ஜெ.ஜெ.நகர் அண்ணா நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு இத்தகவலை காவல்துறை அனுப்பியது. இதைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்பட்டது. உடனடியாக பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மதியத்திற்கு மேல் பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பொதுமக்களும் பெற்றோர்களும் பீதியடைய வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு காரணமாக மர்ம நபரை விரைவில் கண்டுபிடித்து விடலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Exit mobile version