கொடூரம்.. தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை!

Murder

Murder

தாம்பரம் ரயில் நிலைய வாசலில் சுவேதா என்ற கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இளம் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள எம்சிசி கல்லூரியில் படித்து வருபவர் ஸ்வேதா (22), இவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை சரமாரியாக குத்த ஆரம்பித்தார். அப்போது இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சமயத்தில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞரும் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார். இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இன்ஜினீயர், ராம்குமார் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்வயரைக் கடித்துத் தற்கொலை செய்துக் கொண்டார்.இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இளம்பெண் உயிரிழந்தார். இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்றும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இன்ஜினீயர், ராம்குமார் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்வயரைக் கடித்துத் தற்கொலை செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version