காதலித்து திருமணம் செய்த தங்கை மற்றும் அவருடைய கணவரை வீட்டுக்கு வரவழைத்து அண்ணன் வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்திலுள்ள விளந்தகண்டம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (28) என்பவர் சென்னையைச் சேர்ந்த மோகன் எனபவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை மீறி இந்த திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இன்று தனது கணவருடன் சரண்யா விளந்தகண்டத்துக்கு வந்திருந்தார். அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவருடைய முன்னாள் காதலர் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து சரண்யா மற்றும் அவருடைய கணவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.
உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்த காவல்துறையினர் இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.