கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்சாரம் வைத்து களிறு யானையை கொலை செய்த விவசாயியை வனத்துறை காவலர்கள் கைது செய்தி சிறையில் அடைத்தனர்.
தடாகம் அருகேவுள்ள வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எம். மனோகரன் (57). இவருடைய தோட்டத்துக்கு சொந்தமான இடத்தில் 12 வயதில் இருந்து 15 வயது மதிக்கத்தக்க களிறு யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் தோட்டத்தில் அமைக்கப்பட்டி இருந்த மின்சார வேலியில் யானை விழுந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து விவசாயி மனோகரன் மற்றும் அவருடைய மகன் நரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாகினர். தொடர்ந்து அவர்களை தேடி வந்த வனத்துறையினர், மனோகரனை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான நரேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.