சென்னையில் பயங்கரம்! பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்

சென்னையில் காருடன் பெண்ணை கடத்தி கூட்டுபலாத்காரம் செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 40வயது பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அய்யப்பந்தாங்கல் அருகே செல்லும்போது அப்பெண்ணின் காரை வழிமறித்த மர்மகும்பல் டிரைவரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை காரோடு கடத்திச்சென்றது. பின்பு மறைவான இடத்தில் காரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி 6 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதோடு அவர் அணிந்திருந்த 8 பவுன் நகையையும் திருடிசென்றுள்ளனர். இதுகுறித்து அந்தப்பெண் போலீசில் புகாரளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பெண்ணை கடத்தும்போது கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

Exit mobile version