கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி முத்துமாரி வேற மாறி

மனைவியே, கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம்  கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி, முத்துமாரி தம்பதி. இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வரும்போது மர்மநபர்கள் அவர்களது இருச்சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி  கம்பு,கற்களால் வைரசாமியை கடுமையாக தாக்கி, அடித்து கொலை செய்தனர். பிறகு, முத்துமாரி அணிந்திருந்த நகையையும் பறித்துச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் மர்மகும்பல் தனது கணவனை அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி முத்துமாரி அழுதுள்ளார். இந்த விசயம் காவல்துறைக்கு செல்ல, அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் துருவி,துருவி விசாரணை நடத்தியதில், வேறு ஒருவருடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால், கூலிப்படையை வைத்து தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரவசாமியும், முத்துமாரியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version