மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ₹5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (43). இவருக்கு இரண்டு மகன்கள் & ஒரு மகள் உள்ளனர். கடந்த 2011ல் முருகேசன், தனது 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமடைந்தார். மகள் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த அந்த சிறுமியின் தாயார், புதுக்கோட்டை அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டு முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், முருகேசனுக்கு சாகுவரை ஆயுள்தண்டனையும், ₹5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Exit mobile version