தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1,700ஐ நெருங்கியுள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று 226 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று 202ஆக குறைந்தது. நேற்று 1,658 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு எண்ணிக்கை கூடுதலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.