அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது ரஜினியிடம் கேட்கமாட்டேனா ? மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இன்று இணைந்தார்.கட்சியில் இணைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார். அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்:

அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது எனது நண்பரும்,நடிகருமான ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமலா இருப்பேன்.ரஜினி எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதரவு கேட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version