அலுவலக பெண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமரா பதித்த உரிமையாளர் : பெண் ஊழியர்கள் அதிர்ச்சி

நாகர் கோவிலில் அலுவலக பெண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமரா பதித்த உரிமையாளரை கோட்டார் பகுதி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் சஞ்சு (29). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செட்டிகுளம் பகுதியில் Z-3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து அதில் மூன்று பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

Read more – மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழக அரசே இனி பராமரிக்கலாம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில், திடீரென பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை சஞ்சு மேற்கொண்டு வந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் மூவரும் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சரியான விளக்கம் எதையும் அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் கோவமடைந்த பெண்கள் அருகில் உள்ள கோட்டார் மகளிர் காவல் நிலையில் தகவல் தெரிவித்தனர்.

தவலறிந்த காவல் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து சஞ்சுவை கைது செய்ததோடு அவர் பொருத்திய கேமரா, மடிக்கணினி மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version