பொதிகையில் சமஸ்கிருத நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் : வழக்கறிஞர் வேண்டுகோள்

பொதிகையில் சமஸ்கிருத மொழி நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
DD Podhigai

உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் மதுரை வழக்கறிஞர் ஏ.கண்ணன், காணொலி வழியாக ஆஜராகி கூறியதாவது:-

பொதிகையில் சமஸ்கிருதம்

பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்திக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 15 நிமிடங்கள் சமஸ்கிருத வாராந்திர செய்தி தொகுப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட பொதிகை தொலைக்காட்சியில் இதுவரை வேறு மொழி செய்திகள் எதுவும் இடம்பெறவில்லை. அப்படியிருக்கும் போது தமிழர்களின் பண்பாட்டு வாழ்விற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை ஏற்க முடியாது.

ரத்து செய்ய வேண்டும்

எனவே, சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித் தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Exit mobile version