தமிழ்நாடு அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் செல்போனில் பேசுவதற்கும் பாடல்கள் கேட்பதற்கும் மற்றும் செல்போன் கேம்களை விளையாடுவதற்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பொது இடங்களில் செல்போன் பயன்படுத்தும் போது அருகிலிப்பவர்களுக்கு அது பிரச்னையாகி விடுகிறது. பேருந்து பயணங்களின் போது செல்போன் பேசுவதாலும், லவுடு ஸ்பீக்கரில் வைத்து பாடல் கேட்பதாலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போக்குவரத்து துறைக்கு புகார் அளித்து வந்தனர். தற்போது இதுதொடர்பாக ஒரு முடிவை எடுக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி பயணிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது கைப்பேசி பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.