தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,426 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்மட்டும் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பதாக  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version