தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு சிமெண்ட் பூசி மூடிய மகன்..!!

chenna neelangarai mother death
suicide death

இறந்துபோன தாயின் சடலத்தை பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து சிமெண்ட் பூசிய மகனின் செயலால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை நீலாங்கரையிலுள்ள சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (53). தனது தாயார் செண்பகத்துடன் (86) அவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியை சில நாட்களாக அக்கம் பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. அதனால் அவர் எங்கே என்று சுரேஷிடம் அவர்கள் விசாரித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர், சில நாட்களுக்கு முன்பு தாயார் உயிரிழந்துவிட்டதாகவும் அவருடைய உடலை டிரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்திய காவல்துறையினர் டிரம்மில் கிடந்த 86 வயதான மூதாட்டியின் உடலை, டிரம்மில் இருந்து எடுக்க முடியாத காரணத்தால் அந்த டிரம்முடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு , மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மூதாட்டியின் மகன் சுரேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசாரிடம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version