கொரோனா குணமடைந்து வீடு திரும்பினார் அமைச்சர் காமராஜ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து  வீடு திரும்பியுள்ளார்.

ஜனவரி 5 ஆம் தேதி அமைச்சர் காமராஜ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமராஜ்க்கு கொரோனா தொற்று உறுதியானது. 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல்ல ஏற்பட்டது. அதன்பிறகு அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  பின்னர், அங்கிருந்து அமைந்தகரை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு , வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அமைச்சர் காமராஜுக்கு, கடந்த 25 ம் தேதி வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது. இந்தநிலையில் சற்று உடல்நிலை தேறியதை அடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். கொரோனா தொற்று முழுவதும் நீங்கிய நிலையில் காமராஜ் இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்.

Exit mobile version