மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டு போட்ட மாநகராட்சி ஊழியர்கள் – மன உளைச்சலில் தற்கொலை!!!

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி சாந்தா, இவருக்கு ஒரு மகள் உள்ளது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 9ம் தேதி சாந்தாவின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது எனக்கூறி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிறப்பு பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மேலும், அவரது 72 வயதுடைய சாந்தாவிடம் கொரோனா பரிசோதனை மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, யாரும் இல்லாத அந்த வீட்டிற்கு உள்ளேயே வைத்து கதவை வெளியில் பூட்டி சாவியை எடுத்துச்சென்றுள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள்.

அடுத்த நாள் பரிசோதனை முடிவு வந்ததில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது ஆயினும் சாவியை தர மறுத்துள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள் .ஆனால் அந்த வீட்டின் கதவு நான்கு நாட்களாக திறக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

போனில் தொடர்பு கொண்டபோதும் தொடர்ந்து எடுக்கப்படாததால் உறவினர்கள் பயந்துபோய் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி கெஞ்சி சாவியை வாங்கி வீட்டை திறந்துள்ளனர்.கதவை திறந்ததும் அதிர்ச்சியில் உறவினர்கள் உரைந்தனர் தூக்கிய தொங்கிய நிலையில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் அவரை வீட்டில் வைத்து பூட்டியதால் மன உளைச்சலில் மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.கொரோனாவால் உயிரிழந்ததை விட அதன் பெயரால் இது போன்ற அலட்சியதால் உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறது.

Exit mobile version