அடுத்த முறை நான் சாப்பிட ஈசல் செய்து கொடுங்கள்.. பிரபல தமிழ் யூடியூப் சமையல் கலைஞர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி..

பிரபல யூடியூப் சமையல் கலைஞர்களிடம் ஓலை பாயில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட ராகுல் காந்தியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கரூர்:

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மட்டும் செய்யாமல் தொடர்ந்து கிராம மக்களிடம் அமர்ந்து செல்பி எடுத்துக்கொள்வதும், தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து வருகிறார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தோட்டத்தில் ராகுலுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், வில்லேஜ் குக்கிங் சேனல் என்னும் YOUTUBE சேனலை 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்கள் இவர்களின் தேவைக்கு போக, சமைக்கும் உணவுகளை அருகில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அளித்து பசியாற்றுகின்றனர்.

Read more – இன்றைய ராசிபலன் 30.01.2021!!!

இந்தநிலையில், செயற்கையான மசாலா பொருட்கள் எவற்றையும் பயன்படுத்தாமல் மண்மணம் மாறாமல் காளான்பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி இதில் பங்கேற்றுக்கொண்டார். மேலும், தொடக்கத்தில் இருந்து உங்களுடன் பயணிக்கவே ஆசை பட்டேன். ஆனால் நேரம் அமையவில்லை என்று கூறிக்கொண்டு தயிர் பச்சடி செய்து ராகுல் காந்தி அசத்தினார். அதனை தொடர்ந்து அந்த சமையல் கலைஞர்களுடன் உடன் அமர்ந்து உணவு அருந்திவிட்டு தமிழில் நல்லாயிருக்கு என்றும், நன்றி எனவும் தெரிவித்தார்.

அவர்களிடம் என்னென்ன உணவு வகைகள் உங்களுக்கு சமைக்க பிடிக்கும், என்ன விரும்பி சமைப்பீர்கள் என்று கேட்டறிந்த ராகுல் காந்தி, அடுத்தமுறை எனக்கு ஈசல் சமைத்து கொடுக்க வேண்டும் என்று அந்த வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் கலைஞர்களிடம் அன்பு கோரிக்கையும் வைத்தார். தற்போது இந்த வீடியோ யூடியூப்பில் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Exit mobile version