சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.
fire accident

சேலம் :

சேலம் பகுதி குரங்குச்சாவடி அருகே பெருமாள் நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன், மர மில் உரிமையாளர். இவரின் மனைவி புஷ்பா (வயது 40). அன்பழகன் தனது தம்பி கார்த்தி(40) குடும்பத்துடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.மேலும் வீட்டின் மாடியில் இவர்களின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு எப்பொழுதும் போல அன்பழகன், அவரின் மனைவி புஷ்பா, கார்த்தி, அவரின் மனைவி மகேஸ்வரி (35), இவர்களின் குழந்தைகள் சர்வேஷ்(12), முகேஷ்(10) ஆகியோர் அந்த வீட்டின் அறைகளில் உறங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பற்றி கொண்டது ஒரு நொடியில் தீ வீடு முழுவதும் பரவி வீடே நாசமானது.

இதில் வீட்டில் கீழே உறங்கிக்கொண்டு இருந்த அன்பழகன் மட்டும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிக்க வீட்டில் உறங்கிய மற்ற 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர் . அதில் தீயில் கருகி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், அன்பழகனும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த சூரமங்கலம் தீயணைப்பு படையினர் தீயணைப்பு அலுவலர் கோவிந்தன் தலைமையிலும் மற்றும் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் மேற்பார்வையிலும் காவல் துறையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் தீயில் கருகி உயிரிழந்த அனைவரின் உடல்களும் சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version