பள்ளிக்கூடங்கள் கூடிய விரைவில் திறக்கக்கூடும் என அரசு ஆலோசனை

தமிழகத்தில் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களை அக்டோபர் 5-ந்தேதி திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றது. ஆனால் தற்போது கொரோன பரவலை மீறியும் சில தளர்வுகளுடன் சமூகம் நடைபெறுகின்றது. ஆனால் பள்ளி,கல்லுரிகளுக்கு பாடம் முடங்கவில்லை ஒன்லைன் முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றது. ஆன்லைன் வகுப்புகள் நகர்புறங்களில் நடைமுறைக்கு வந்தாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது இல்லை. ஆன்ட்ராய்டு செல்போன் எல்லா மாணவர்களிமும் இல்லாத காரணத்தால் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. விருப்பப்படும் மாநிலங்கள் பெற்றோர்-ஆசிரியர்களுடன் கலந்து பேசி வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதன்படி ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறப்பதற்கு தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. அனால் நாற்பது மாணவர்கள் இருக்கவேண்டிய வகுப்புகளில் இருபது மாணவர்கள் தான் இருக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அரசு அனுமதி அளித்தால் உடனடியாக பள்ளிகள் திறக்கக்கூடும் என கல்வி குழு தலைவர் டாக்டர் கே.வாசுதேவன் கூறுகிறார்.

Exit mobile version