உடன் தொழுகைக்கு அழைத்த தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை வெட்டிக் கொலை செய்த மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் (70). இவர் தனது இளைய மகன் இம்ரானுடன் வேப்பூர் என்கிற இடத்தில் வசித்து வந்தார். தனது தாய் இறந்த பிறகு இம்ரானுக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மகனை இக்பால் அனுசரித்து அந்துள்ளார். கடந்த 17-ம் தேதி மகன் இம்ரானை தொழுகைக்கு அழைத்துள்ளார் இக்பால். இதற்கு இம்ரான் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது எழுந்த ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியால் தந்தை இக்பாலை சராமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அருகில் வசித்தவர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இம்ரானை கைது செய்த போலீஸ், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.