“ராகுலின் தமிழ் வணக்கம்” – கோவை வந்தார் ராகுல்காந்தி

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

“ராகுலின் தமிழ் வணக்கம்” எனும் பெயரில் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தி எம்.பி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.00 மணியளவில் கோவை விமானம் நிலையத்திற்கு வந்திறங்கினார் ராகுல் காந்தி.

அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கோவையில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடிய ராகுல், இரவு திருப்பூரில் உள்ள பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை (24/01/2021) திருப்பூரியில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, ஜனவரி 25-ஆம் தேதி அன்று கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

Exit mobile version