மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்தி தொடர்பான பேச்சு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் பகுதியிலுள்ள வர்த்தக மையத்தில் சி.ஐ.ஐ கூட்டமைப்பின் தென்னிந்திய சினிமா தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய ஏ.ஆர். ரஹ்மான், வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியாவை வட இந்தியா மற்றும் தென்னிந்தியா என்று பிரித்து பார்க்கின்றனர். இது என்னை மிகவும் பாதித்துள்ளது. இந்தியா என்றால் ஒன்று தான் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தி தொடர்பாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ் தான் இணைப்பு மொழி என்று தெரிவித்தார்.
டெல்லியில் அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இந்தியை அலுவல் மொழியாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இதற்கு தமிழ்நாடு உட்பட, மாநில வளர்ச்சியை பேணும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தன. இதற்கு எதிர்வினையாற்றிய ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டு பாவேந்தர் பாரதிதாசனின் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைக்கு செம் பயருக்கு வேர்”என்கிற விரியுடன் கூடிய தமிழணங்கு போஸ்டரை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.