லஞ்சம் கேட்டதால் ஆட்டோவை எரித்த ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின் !!

சென்னையில் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அதிகாரிகள் பணம் கேட்டதால் டீசல் ஊற்றி தனது ஆட்டோவை எரித்த ஓட்டுநருக்கு, புதிய ஆட்டோவை மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தாண்டமுத்து

அரியலூரைச் சேர்ந்தவர் தாண்டமுத்து. சென்னை, அயனாவரம் பகுதியில் வசித்து வரும் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். ெகாரோனா பாதிப்பினால் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் வாழ்வாதாரம் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளார். இந்த நிலையில், மீண்டும் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்தபிறகு, கடந்த மாதம் ஆட்டோ உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக, சென்னை, அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால், அவரை அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும் உரிமத்தைப் புதுப்பிக்க பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தாண்டமுத்து, போக்குவரத்து அலுவலகத்திலேயே தன் ஆட்டோவின் மீது டீசல் ஊற்றி எரித்தார். மேலும், அவர் தற்கொலைக்கும் முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.இந்த செய்தி, சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிகழ்விற்கு பிறகு, அவருக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், புதிய ஆட்டோ வாங்குவதற்காக பண உதவி செய்தார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தாண்டமுத்துக்கு, புதிய ஆட்டோ ஒன்றினை வழங்கினார். அப்போது, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க.வினர் உடனிருந்தனர்.

Exit mobile version