பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

ரூ. 3,770 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை வருகிறார்.  பின்னர் 10.40 மணியளவில் ‘ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்கிறார். 11.05 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்டிரல், ரிப்பன் மாளிகை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். 

அங்கு ரூ. 3,7770 கோடி மதிப்பில் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல் 2,640 கோடி ரூபாய் மதிப்பில் கல்லணை கால்வாண் புணரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மோடி வருகையை ஒட்டி சென்னையில் 5 மணி நேரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்குபெறுகின்றனர்.

Exit mobile version