காதலிக்கு தீ வைத்த இளைஞர்: வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் ஆத்திரம்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மீது தீ வைத்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டான்.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர்  வெங்கட்டம்மா.இவருக்கு ரஜித்தா என்ற மகள் உண்டு. அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் ரஜிதாவும் 7 வருடம் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜித்தாவின் தந்தை இறந்து போனதால், அவர் வேலை பார்த்து வந்த சென்னை மாநகராட்சியில் ரஜித்தாவுக்கு வேலை கிடைத்துள்ளது. மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக அவர் வேலை பார்க்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு ரஜிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகவும் சதிஷ் உடன் பழகுவதை குறைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே ,மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் ரஜிதாவுக்கு நிச்சயம் ஆகியிருக்கிறது. . இந்த விஷயம் தெரிந்ததும் சதீஷ் ரஜிதாவுட ன் சண்டை போட்டு வந்துள்ளார்.  இதனால், ஆத்திரத்தில் இருந்த சதீஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் ரஜீதாவின் வீட்டின் மேல் இருந்த ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் குதித்துள்ளார். பின்னர், காதலி ரஜிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மா மீதும் தீ வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதில் வீட்டுக்குள்ளேயே 3 பேருமே கருகி பலியாகியுள்ளனர். வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version