ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டுவிட்டது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் இந்த சுங்கச்சாவடியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். தென் மாவட்டங்களிலிருந்து சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இவ்வழியாக தான் கண்டிப்பாக சென்றாக வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த சுங்கச்சாவடியினை கடந்து தினமும் 100க்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்றுவருகின்றனர்.

இந்தநிலையில் தான் சுங்கச்சாவடியில் பணியாற்றிவந்த ஊழியர் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு விட்டதால் அவ்வழியாக அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி செல்கின்றனர்.

Exit mobile version