முதல்வராவது அவ்வளவு ஈஸியா ? அந்த பதவி உங்களுக்கு இல்லையே ராசியா… ஸ்டாலினை வம்பிழுத்த எடப்பாடி

முதல்வர் பதவி வருவதற்கு ஒரு ராசி வேண்டும் அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.

இந்தநிலையில், அதிமுக சார்பில் தர்மபுரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சரம் மேற்கொண்டபோது கூறியதாவது; முதல்வராவதற்கு கொஞ்சம் ராசி வேண்டும். அந்த ராசி ஸ்டாலினுக்கு துளியும் இல்லை. திறமையும் உழைப்பும் இல்லாமல் ஸ்டாலினால் எப்படி முதல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

Read more – 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளது இரண்டு கழகங்களும்…. பிரச்சாரத்தில் போட்டு உடைத்த கமல்ஹாசன்..

தொடர்ந்து, 4 ஆண்டுகளுக்கு முன்பு என்னை யாரென்று தெரியாது என கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது என்னைப் பற்றி பேசுகிறார். மேலும், ஆட்சியை கலைத்து பெரும் முயற்சியை கையில் எடுத்து தோல்வியும் கண்டார். நான் கிராமத்துக்காரன், விவசாயி என நினைத்து ஆட்சியை கலைக்க எண்ணியபோது அதிமுக தொண்டர்கள் என் பக்கம் நின்றனர். இந்த கை மண்வெட்டி பிடித்த கை, எதைக்கண்டும் அஞ்சமாட்டேன் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version